Peru Petru Vilangukinra

Puthugai Manimaran

பாடல்: பேரு பெற்று விளங்குகின்றன
பாடகர்: புதுகை மணிமாறன்


பாடல் வரிகள்:

பல்லவி

பேரு பெற்று விளங்குகின்ற ஆங்கார நீலி
பெரம்பூர் வாழுகின்ற வீரம்மா காளி -2

கேடு வினை துடைப்பவளே
கேட்டதெல்லாம் கொடுப்பவளே -2

ஊரெல்லாம் வாழ்பவளே
உலகாளும் நாயகியே

கோவம் வந்தா நீலி
நீ குங்குமக்காரி
அம்மா வேதம் கொண்ட தாய்
நம்ம வீரம்மா காளி -2

பேரு பெற்று விளங்குகின்ற ஆங்கார நீலி
பெரம்பூர் வாழுகின்ற வீரம்மா காளி

சரணம் 1

ஊரு செழிக்க வேணும்
உறவு வளர வேணும்
உன்னால ஊரு மக்கள்
நல்லா இருக்க‌ வேணும்
நாடு செழிக்க வேணும்
நல்ல மழை பொழிய வேணும்
நாங்களெல்லாம் உன்னால
நல்லா இருக்க‌ வேணும் -2
(கோவம் வந்தா)
(பேரு பெற்று)

சரணம் 2
தங்கமும் பார்த்தாலே
அங்கமெல்லாம் சிலுக்குமம்மா
அண்டம் எல்லாம் அடங்கிடுமே
அம்மா உன் அருளாலே -2
அன்பாய் உலகை பார்த்தால்
அகிலமெல்லாம் செழிக்குமம்மா
நீ ஆங்காரமாய் பார்த்தால்
எரிமலையாய் வெடிக்குமம்மா

தங்கமும் பார்த்தாலே
அங்கமெல்லாம் சிலுக்குமம்மா
அண்டம் எல்லாம் அடங்கிடுமே
அம்மா உன் அருளாலே -2
அன்பாய் நீ உலகை பார்த்தால்
அகிலமெல்லாம் செழிக்குமம்மா
நீ ஆங்காரமாய் பார்த்தால்
எரிமலையாய் வெடிக்குமம்மா
(கோவம் வந்தா)

(பேரு பெற்று)

வரிகளில் பிழைகள் இருப்பின்
என்னைப் பொறுத்தருள்க

இப்படிக்கு உங்கள்
- உதயக் குமார் (தென்காசி)

நன்றி!

Lyrics Submitted by Udhaya Kumar 6385330652

Lyrics provided by https://damnlyrics.com/