Pilavunda Malaye (Song)

Bro.D.G.S.Dhinakaran

பிளவுண்ட மலையே

1. பிளவுண்ட மலையே,
புகலிடம் தாருமே;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும்
போக்கும்படி அருளும்.

2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
கஷ்டதவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே;
நீரே மீட்பர், யேசுவே.
ஏதுமின்றி ஏழையேன்
உம்மில் தஞ்சம் புகுந்தேன்.

3. வெறும் கையனாய் வந்தேன்,
உம் சிலுவை பற்றினேன்;
எந்தன் நீதி கந்தையே;
உம் அருளால் தாங்குமேன்;
ஜீவ ஊற்றை நாடினேன்;
தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்வினில்
கண்ணை மூடும் சாவினில்
மறுமைக்கு போகையில்,
நடுத்தீர்ப்புத் தினத்தில்,
பிளவுண்ட மலையே,
புகலிடம் தாருமே.

Lyrics Submitted by JD

Lyrics provided by https://damnlyrics.com/