ஓ… என் வானம் விடிவது உன்னாலே என் வாசல் திறப்பது உன்னாலே என் வீதி நிறைவது உன்னாலே என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும் உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே
கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம்
என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆஆஆ… ஆ………..
நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய் கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம் சொல் இன்றி மெளனம் கொண்டோம் துன்பம் கண்டோம் ஏன் காதல் சிந்தித்தோம் தோம் ஏன் வந்தாய் நீயாக பஞ்சோடு தீயாக
உன்னால் நான் பாடும் பாடல் உன்னால் அதில் காயம் புன்னகை உன்னால் என் உரிமை குரலும் உன்னால் என் உயிரும் உன்னால்
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
நீ அமுத மழையா அமில மழையா ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
எனது வலி அறிய உனது இதயம் குடு ஹேய் வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு என் பேர் சொல்லும் பேரன்பே வா…
உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற ணால் உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால்
என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால்
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்
கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம்
என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
நான் தனிமையில் சிரிப்பது உன்னால் சில சமயம் அழுவது உன்னால் நான் பந்தியில் அமர்வது உன்னால் சிறு பட்டினி கொல்வதும் உன்னால் என் சந்திரன் வருவதும் உன்னால் என் ஜனனமும் மரணமும் உன்னால்
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும் என் உரை கேட்பதும் கேட்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும் என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும் அது உன்னால் அது உன்னால் அது உன்னால்
Lyrics Submitted by Aishwarya B