Pilavunda Malaye (Song) - Bro.D.G.S.Dhinakaran
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Pilavunda Malaye (Song) Lyrics
பிளவுண்ட மலையே
1. பிளவுண்ட மலையே,
புகலிடம் தாருமே;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும்
போக்கும்படி அருளும்.
2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
கஷ்டதவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே;
நீரே மீட்பர், யேசுவே.
ஏதுமின்றி ஏழையேன்
உம்மில் தஞ்சம் புகுந்தேன்.
3. வெறும் கையனாய் வந்தேன்,
உம் சிலுவை பற்றினேன்;
எந்தன் நீதி கந்தையே;
உம் அருளால் தாங்குமேன்;
ஜீவ ஊற்றை நாடினேன்;
தூய்மையாக்கேல் மாளுவேன்.
4. நிழல் போன்ற வாழ்வினில்
கண்ணை மூடும் சாவினில்
மறுமைக்கு போகையில்,
நடுத்தீர்ப்புத் தினத்தில்,
பிளவுண்ட மலையே,
புகலிடம் தாருமே.
Lyrics Submitted by JD
Enjoy the lyrics !!!