Siruvani - Ilayaraja, S. P. Sailaja & Sunandha
| Page format: |
Siruvani Lyrics
சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ…
தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில் குளிச்சி வளந்தவ…
காவேரியில் நான் குளிச்சேன் பாலாத்துல நீந்தி வந்தேன் யாரா இருந்தாலும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
மற்றும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ….
வைகை தண்ணி குடிச்ச பொண்ணு வைகறையில் எழுந்திடுவா வாசப்பெருக்கி கோலம் போட்டு சாமியத்தான் கும்பிடுவா
சிறுவாணி தண்ணி குடிச்சா சீக்கிரமா எழும்ப மாட்டா சூரியனும் வந்தாக்கூட திரும்பி அவ பாக்கமாட்டா
சண்டித்தனம் பண்ணும் பப பபம் பபபம் வண்டிமாடு போல பப பபம் பபபம் கொண்டையில குளுக்கு சண்டை இங்கு எதுக்கு சக்களத்திதான் சண்டை போடுவா நமக்கெதுக்கு
சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ ஹே
தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில் குளிச்சி வளந்தவ ஹே
தண்ணியிலே பேதமில்லை அதுக்கு நிறம் ஏதுமில்லை சேருகின்ற நிலத்தைப் போல மாறும் அந்த நிறமும் இங்கே எவ்வளவு தண்ணியத்தான் அள்ளி அள்ளி குடிச்சு பார்த்தும் அந்த குணம் வரவுமில்லை டவனும் கொடுக்கவில்லை
கண்ணிருந்து குருடா ரம்பம் பபம்பம் நடந்திடும் மனிதா ரம்பம் பபம்பம்
கண்ணிருந்து குருடா நடந்திடும் மனிதா மண்ணு மேலதான் நீயிருக்கணும் புரிஞ்சிக்கடா
சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ…ஹே
தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில குளிச்சி வளந்தவ…ஹே
ஹே ஹே காவேரியில் நான் குளிச்சேன் பாலாத்துல நீந்தி வந்தேன் யாரா இருந்தாலும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
ஆமா
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
டுர்ர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்
மற்றும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும் ஏஹே….செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும் தம் தம்தம்
Lyrics Submitted by Sathish